Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு….. பழநி முருகன் கோவிலுக்கு வருவோருக்கு இது கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் துணியாலான முக கவசம் வழங்கப்படுகிறது.

Categories

Tech |