Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…! வெயிட் பண்ணி தான்…. ஏழுமலையானை தரிசிக்க முடியுமாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

திருமலை திருப்பதிக்கு அதிக கூட்டம் வருவதால் தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் மூன்று நாட்கள் முதல் நான்கு நாட்கள் தங்கி இருக்கும் ஏற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் திருமலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால் அதிக கூட்டம் வந்துள்ளதால் நேற்று இலவச டிக்கெட் வாங்கி சென்றவர்களுக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மூன்று முதல் நான்கு நாட்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அதில் திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மூன்று நாட்கள் முதல் நான்கு நாட்கள் தங்கி இருக்கும் ஏற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்து வந்த நிலையில் தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 40,000 பேர் தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பிப்ரவரி 10-ஆம் தேதி சனிக்கிழமை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 40,463 ஆக உள்ளது. இதனால் தினமும் உண்டியல் வருமானம் மட்டும் ரூ 2 கோடியே 46 லட்சம் ஆக இருந்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமையை மோசமடைவதர்க்குள் அதிகமான பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Categories

Tech |