Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு குட் நியூஸ்…. பிப்ரவரி 1 முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து நாடுகளிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

Categories

Tech |