Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. உறங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள்…. திடீர் குண்டு வீச்சு…. 2 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் கடந்து சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் இந்து மதத்தினர் மற்றும் வெளி வெளிமாநிலங்களை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் சோபியாவின் ஹர்மன் பகுதியில் உத்திர பிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாஹர் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த இரண்டு பேரையும் குறி வைத்து பயங்கரவாதி கையேறிக்கொண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வீச்சு தாக்குதலில் உறங்கிக் கொண்டி இருந்த வெளி மாநில தொழிலாளர்கள் மோனிஷ், ராம் என இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றிவழித்த பாதுகாப்பு படை பயங்கரவாதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வெளி மாநில தொழிலாளர்கள் மீது கையெறி குண்டு வீசிய லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி இம்ரான் பஷீரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Categories

Tech |