கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள தேனி கோட்டை யார்ப் தர்காவில் ஊர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தர்கா அருகில் உள்ள அசாம் மாநிலத்தில் சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். விழா முடிவடைந்த பிறகு நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து பொருட்களை மூட்டையாக கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது மழையின் காரணமாக அங்கு தனியார் நிலத்தில் ஒரு சுற்று சுவர் அமைக்கப்பட்டது. இந்த சுற்றுசுவரின் இடிபாடுகள் பேன்சி மற்றும் பொம்மை கடைகள் மீது விழுந்தது. இதில் கடையில் இருந்தவர்கள் இடிபாடர்களுக்கிடையே சிக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கிய அசாம் மாநிலத்தை சேர்ந்த பேன்சி கடைக்காரர்களான ஹாமியான் பேகம்(35), ரபிக்வுஸ் இஸ்லாம்(22) இசாத் அலி மற்றும் தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மகள் சாகனா(11), வெங்கடேஷ் மகள் ஹேமாவதி(12) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களை தேனிகனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆசாம் மாநிலத்தை சேர்ந்த ஹாமியன் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை போல கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாலாஜி மகள் சகானாவும் உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் தேனிக்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தேனிக்கனிகோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பலியான சிறுமி சகானா தேனிகனிக்கோட்டை அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்ததும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தனது தோழியான 7 ஆம் வகுப்பு மாணவி ஹேமாவதியுடன் சாமி கும்பிட வந்தபோது சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இது குறித்து தேனிகனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாமி கும்பிட வந்த சிறுமி உள்ளிட்ட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.