உக்ரைன் நாட்டில் ரஷ்யா திடீரென ஊடுருவி போரை தொடங்கியதை தொடர்ந்து தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என கருதிய பின்லாந்தும், சுவீடனும் நோட்டா அமைப்பில் முடிவு செய்தது. ஆனால் அவை நோட்டா அமைப்பில் இனைய வேண்டுமானால் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளில் நாடாளுமன்றங்கள் அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நோட்டா அமைப்பின் பாதுகாப்பு அந்த நாடுகளுக்கு கிடைக்கும்.
அதாவது நோட்டா அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் ஒரு உறுப்பு நாட்டின் தொடர்பான தாக்குதல் அனைத்து உறுப்பினர்களும் மீதான தாக்குதலுக்கு சமம் எனும் கொள்கையின்படி நோட்டா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. இந்த சூழலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் வகையில் அட்லாண்டிக் கடல் கடந்த கூட்டணியின் விரிவாக்கத்தை வலுவாக ஆதரித்து நோட்டாவில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் நோட்டாவில் இணைவதன் மூலமாக இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கு நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும். இது முழு அட்லாண்டி கூட்டணிக்கும் பயனளிக்கும் என அவர் பதிவிட்டு இருக்கிறார். முன்னதாக இரண்டு நாடுகளின் இணைப்பிற்கு ஆதரவாக செனட் சபையில் 95க்கு ஒன்று என்ற கணக்கில் வாக்களித்தது. இதுவரை 30 நோட்டா நாடுகளில் அமெரிக்கா 23வது இடத்தையே பிடித்தது. இதற்கு முன்னதாக இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது.