தூங்குவதற்கு முன் இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண் வலி, சரும எரிச்சல் குணம் ஆகும்.
இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்து விட்டு தொப்புளை சுற்றி ஒன்றரை இன்ச் அளவிற்கு மசாஜ் செய்யும் போது முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவை குணமாகின்றன.
இரவில் தொப்புளில் வேப்பெண்ணெய் வைத்துவிட்டு படுத்தால் சரும வியாதிகளும், தொற்றுகளும் குறைகின்றன. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.