Categories
உலக செய்திகள்

நைஜீரியா: சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்…. ஒட்டம்பிடித்த கைதிகள்….!!!!

நைஜீரியா தலைநகரான அபுஜாவில் குஜே எனும் சிறைச்சாலை இருக்கிறது. இந்த சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் சுமார் 600 கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிஓடிவிட்டனர்.

இவர்களில் 300 கைதிகளை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அத்துடன் தப்பி ஓடியவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஓருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |