நெல்கொள்முதல் ஈரப்பதத்தை 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் முடிந்துவிட்டது. அறுவடை செய்த நெல்லை தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்ற தமிழக அரசு மத்திய அரசிடம் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.