நெற்றில் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை கிராமமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன் கோட்டை கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது வீட்டில் ஆடு வளர்க்கும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் வீட்டில் வளர்ந்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது.
அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் நெற்றியில் 2 கண்கள் இருந்துள்ளது. இதனையறிந்த கிராம மக்கள் மிகவும் வியப்படைத்து நெற்றியில் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை மிகுந்த ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றுள்ளனர்.