Categories
மாநில செய்திகள்

நெசவாளர்களுக்‍கு வழங்கப்படும் நூலின் தரத்தை ஏன் தர சோதனை செய்வதில்லை ….?

இலவச வேட்டி சேலைக்காக வழங்கப்படும் நூலின் தரத்தை என் தர சோதனை செய்வதில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக அரசு இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசால் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதை தடுக்கும் வகையில் நூலின் தரத்தை சோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்க கோரி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி நெசவாளர் சங்கத் தலைவர் திரு. கோவிந்தராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சந்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்டி சேலைகளை தர சோதனை செய்யும்போது நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலை ஏன் தர சோதனை செய்வதில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த மனு குறித்து தமிழக அரசுயின் கைத்தறி துறை செயலாளர் மற்றும் கைத்தறி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |