பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்தாலப்பள்ளி காமராஜ் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு ஹேமலதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஹேமலதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹேமலதா வேலைக்கு செல்வதற்கு முரளி எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஹேமலதா தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஹேமலதாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.