Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நீ வெளிநாட்டிற்கு போக கூடாது”…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை பகுதியில் தாமோதரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் பெங்களூரு மற்றும் தேனி லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் என்ஜினீயரிங் படித்த தாமோதரன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தாமோதரனுக்கு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்பதற்கு ஆசை இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாமோதரன் தனது தாயார் சூர்யாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் வெளிநாட்டிற்கு போககூடாது என்றும், சொந்த நிறுவனத்தை பார்த்து கொள்ளுமாறும் கூறினார். இதனால் மனமுடைந்த தாமோதரன் வீட்டில் தனது அறையில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாமோதரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |