Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ தானே எடுத்த…..? செல்போன் திருடியதாக சந்தேகம்… நண்பரை கொன்ற தொழிலாளி…!!

செல்போனை திருடி விட்டதாக எழுந்த சந்தேகத்தில் நண்பரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காட்டூர் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் செல்வம் (வயது 60) மற்றும் இவர் நண்பரான பால்ராஜ் (வயது 40) இருவரும் கோவையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்நிலையில் குடிபோதையில் ஆட்டோ ரங்கன் வீதியில் இவ்விருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது பால்ராஜின் செல்போன் காணவில்லை.

இதனால் பால்ராஜ் செல்வத்தை சந்தேகப்பட்டு கேட்டபோது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் விளைவாக பால்ராஜ் இரும்பு கம்பியால் நண்பரான செல்வத்தை  கடுமையாக தாக்கினார். இதனால் படுகாயமடைந்த செல்வம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தொழிலாளி பால்ராஜிடம் விசாரித்த கோவை போலீசார் அவரை கைது செய்தனர்.

Categories

Tech |