Categories
மாநில செய்திகள்

நீலகிரி சுற்றுலா தளங்களுக்கு…. நாளை முதல் கடும் கட்டுப்பாடு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோணா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

அதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் சுற்றுலா தளங்களுக்கு நாளை முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலை 10 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதி என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |