நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் மற்றும் 33 அணைக்கட்டுகள் உள்ளன. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், அதேபோல் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூரில் நீர்நிலைகளில் உள்ள குடிசை வீடுகள் மற்றும் அங்கு உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அப்போது நீர் வளத்துறை ,வருவாய்த்துறை அலுவலர்கள் இருந்தனர். இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.