நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்பதால் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறையில் உள்ள முருகன் என்பவர் ஜாமீன் கோரிய வழக்கு, இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மனுதாரரின் வழக்கறிஞர்இந்த வழக்கினை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் மற்றும் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தவறான தகவல் கொடுத்ததாகவும், அதனால் மனுதாரரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதி, நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது. நீதிமன்றத்திற்கு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நடந்த உண்மையை சொல்ல வேண்டும். அப்போதுதான் வாதிடும் வழக்கறிஞருக்கு தைரியம் கிடைக்கும். வழக்கறிஞர்கள் வழங்கும் உண்மையான ஆவணங்களின் அடிப்படையில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பினை வழங்க முடியும். மேலும் நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த காவல் நிலைய அதிகாரி உண்மை தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட இந்த வழக்கு விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.