Categories
தேசிய செய்திகள்

நீட்தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை?…. ஹோமியோபதி ஆணையம் எச்சரிக்கை….!!!!!

மருத்துவ படிப்பு, பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சியடைய வேண்டும். இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை இப்போது நடைபெற்று வருகிறது. இவற்றில் சில ஹோமியோபதி கல்லூரிகளில் நீட்தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஹோமியோபதி ஆணையம் சுற்றறிக்கை விடுத்து இருக்கிறது.

அவற்றில் நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடத்தி, பிறகு ஏதும் காலியிடம் இருப்பின் அதில் நீட் எழுதாத மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என சில உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை கடைபிடித்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எனினும் இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. அதனை தொடர்ந்து நீட்தேர்வு எழுதாமலேயே மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என அறிவிப்பு வெளியிடும் கல்லூரிகளிடம் மாணவர்கள், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். இதற்கிடையில் கல்லூரிகளின் அறிவிப்பை நம்பி சேர்ந்தால், பின் சேர்க்கைக்கான அங்கீகாரம் கிடைக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |