இன்றைய டிஜிட்டல் உலகத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் facebook மிகவும் பிரபலமானது. தங்களின் தரவு பாதுகாப்பானது மற்றும் யாரும் அவர்களை அச்சுறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நம்பிக்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை facebook நிறுவனமான மெட்டா 1 மில்லியன் பைனர்களின் கடவுச்சொல் மூலம் கசிந்ததாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுமாறு பேஸ்புக் எச்சரித்து உள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் பயனர்களின் இந்த தரவுக்கு கசிந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை டேட்டாவை திருடுவதற்காக ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டாக வடிவமைக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை மெட்டா அடையாளம் கண்டுள்ளது.
இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள்களின் ஆப் ஸ்டோரில் பட்டியலிட்டு, போட்டோ எடிட்டர், கேம், விபிஎன் சேவை போன்ற பயன்பாடுகளாக காட்டப்படுகின்றன. அம்சங்களை பயன்படுத்துவதற்காக ஈடாக பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை திருடுவதற்கு அடிக்கடி பேஸ்புக் கணக்குகளில் உள்நுழைய செய்து அதன் பிறகு அவர்கள் பேஸ்புக்கில் இருந்து தரவு மற்றும் கடவுச்சொல்களை திருடுகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனர்களின் தரவுக் கசிந்த வழக்கில் பேஸ்புகிற்கு 5 பில்லியன் அபதாரம் விதிக்கப்பட்டத. கசிந்த பெரும்பாலான நிகழ்வுகளில், ஹாக்கர்கள் சந்தையின் வசதிக்கு ஏற்ப தகவல்களை வெவ்வேறு பகுதிகளாக பிரிப்பதை காணலாம். அதாவது திருடப்பட்ட தரவு தரங்கள் வயது பாலினம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகள் நிறுவனங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு விற்கப்பட்டது.