Categories
மாநில செய்திகள்

நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்…. அமைச்சர் காட்டம்….!!!!

ஆட்டைகடித்து மாட்டைகடித்து இப்போது மனுசனை கடித்த பழ மொழியாக அரசியலில் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பேசி வாங்கிகட்டிகொண்டு பதவிக்காக காத்திருக்கும் ஆர்எஸ் பாரதி நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.தி.மு.க பற்றி விமர்சனம் செய்துள்ளார் என சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். தி.மு.க தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து பிறகு அரசியலில் நுழைந்தார் என திமுகவை பற்றி காட்டமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்வதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்களும் திருப்பி பதிலடிகொடுப்போம் என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கொத்தடிமையாக வேலைபார்த்த ஆர்எஸ் பாரதி இப்போது கோடிக் கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி..? என்று கேட்ட அவர், நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தில் அவர் செய்த ஊழல் சொல்லிமாளாது என்றார். அதுமட்டுமின்றி நீதிமன்றத்தில் ஆதி திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் நீதிபதியாக இருப்பது நாங்கள் போட்ட பிச்சை என்று அவர் கூறியிருந்தார். அதிமுக-வையும், எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் ஆர்எஸ் பாரதி. ஆனால் அன்னக்காவடியாக இருந்துவந்தவர் அல்ல எடப்பாடி பழனிச்சாமி. பியூசி பயின்றுவிட்டு வசதிமிக்க குடும்பத்தில் பிறந்து கட்சியின் மீதுள்ள ஈடுபாட்டால் அதிமுகவில் படிபடியாக முன்னேறியவர் எடப்பாடி பழனிச்சாமி என்று ஜெயக் குமார் கூறினார்.

விமர்சிக்கும் போது வார்த்தைகளை பயன்படுத்துவதில் கவனம் தேவை என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுக-வையும், எடப்பாடி பழனிச்சாமி-யையும் விமர்சிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும். இல்லையெனில் அதற்குரிய தக்க பதிலடி கொடுத்துகொண்டே இருப்போம். திமுக காட்டும் பூச்சாண்டி வேலைகளை எத்தனையோ பார்த்து விட்டோம். இதனால் அதற்கெல்லாம் அஞ்சமாட்டோம் . கலைஞர் காலக்கட்டத்தில் இருந்தபோது சினிமாதுறையில் நடைபெற்ற கபளிகர செயலை இப்போது திரைதுறையில் உதயநிதி செயல்படுத்தி வருகிறார்.

420 போர்ஜரி, சீட்டிங் செய்தவர்கள்தான் அமைச்சர் கேபினட்டில் இருக்கிறார்கள் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிகார போதையில், அதிகார திமிரில் தற்போது செய்யும் செயல்கள் அனைத்துக்கும் 2026ம் வருடம் திமுக பதில் கூற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். திமுக-வின் ஊழல், கமிஷன், கலக்‌ஷன், கரப்ஷன் ஆகியவை குறித்து அனைவருக்கும் தெரியும். கோயம்பேடு செல்வராஜ், கேர் பிளாட்பாரத்தில் உள்ளவர்கள் போன்றோர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் நடுநிலையான போக்கில் காவல்துறை செயல்பட வேண்டுமே தவிர்த்து பழிவாங்கும் செயல்களில் ஈடுவடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வைத்திருந்தோம். இப்போது காவல்துறை ஏவல்துறையென நீதிமன்றமே தெரிவித்துள்ளது. லஞ்சஒழிப்பு துறையை நியாயப்படுத்தும் ஓபிஎஸ் ஜெயலலிதா மரணத்தை நியாயபடுத்துகிறாரா..? என அவர் தெரிவித்தார். இன்றைய முதலமைச்சர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் இல்லா பட்ஜெட் தந்துள்ளார். அத்துடன் நின்று விடவில்லை. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் தந்துகொண்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மக்களுக்கு கிடைக்கும் அடிப்படையில் முதல்வர் செயல்படுகிறார் என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தனது உரையில் தெரிவித்தார்.

Categories

Tech |