Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அடர்காடு கிராமத்தில் தச்சுத் தொழிலாளியான மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் மனோகரன் நெய்விளக்கு நால்ரோடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |