Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் கேரளபுரத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ்  எல்லை பாதுகாப்பு படை வீரரான ராஜசேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மணவாளக்குறிச்சி அருகே  சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து  இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |