நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாயநிலம் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாயநிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (அல்லது) அதிகபட்சமாக ரூபாய்.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலம் அற்ற விவசாயத் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன் அடைவார்கள்.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2022-2023-ஆம் வருடத்திற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாயநிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (அல்லது) அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்க ரூ.10,00,00,000 (பத்து கோடி ரூபாய்) மாநில அரசு நிதியில் இருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை (நிலை)எண்.79, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.10.09.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.