Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற ஜீப்…. பறக்கும் படையினர் அதிரடி…. 3 பேர் உடனடி கைது….!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் போடிமெட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த 2 ஜீப்பை நிறுத்த முயன்றனர். அதில் 1 ஜீப்பை நிறுத்திய நிலையில் மற்றொரு ஜீப் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த ஜீப்பை விரட்டி மடக்கி பிடித்தனர்.

இதனைதொடர்ந்து பிடித்த 2 ஜீப்களிலும் 2 டன் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடி நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்துள்ளனர். மேலும் ஜீப்பில் இருந்த டிரைவர்களான போடியை சேர்ந்த அஜித்குமார்(26), மேல சொக்கநாதபுரத்தை சேர்ந்த கோபி(27), அரிசி உரிமையாளர் பாலமுருகன் ஆகிய 3 பேரையும், 2 ஜீப்பையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

Categories

Tech |