Categories
உலக செய்திகள்

நிற்காமல் ஓடிய லாரி… கோர விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் சோகம்…!!!!!!

நெதர்லாந்தில் உணவு திருவிழா கூட்டத்திற்குள் லாரி புகுந்த ஏற்படுத்திய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நியூ பெய்ஜர்லாந்து நகரில் ஆற்றின் கரையோரமாக திறந்தவெளியில் உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டு தீயில் வாட்டி கொடுக்கப்படும் அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து சரக்கு லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு ஆற்றின் கரையில் இறங்கி உள்ளது. அதன் பின்னரும் லாரி நிற்காமல் ஓடிக் கொண்டிருந்ததால் உணவு திருவிழாவில் கலந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்துள்ளது.

இதில் பலர் லாரி சக்கரங்களில் சிக்கி நசுங்கியுள்ளனர். இந்த கோர விபத்தில் ஆறு பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். மேலும் டசன் கணக்கானோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே இந்த விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரியின் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |