Categories
சினிமா தமிழ் சினிமா

நிறுத்துங்கள்….! “எனது தந்தையை கேலி செய்வது நல்லதல்ல”…. ஆவேசமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய அபிஷேக் பச்சன்….!!!!!

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சனை குறித்து கேலியாக பேசி ஜோக் அடித்ததால் கோபமாக அபிஷேக் பச்சன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஹிந்தி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான அமிதாபச்சன் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களாக்கி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார். தற்போது 80 வயது ஆன நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவரின் மகனான அபிஷேக் பச்சனும் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் அபிஷேக் பச்சன். இந்த நிகழ்ச்சியை ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சியில் ஒருவர் அமிதா பச்சன் பற்றி கேலி செய்ததால் கோபமடைந்த அபிஷேக் பச்சன், “நிறுத்துங்கள்.! என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ஜோக் அடியுங்கள். என் தந்தையை கேலி செய்து பேசுவது நல்லதல்ல” என ஆவேசமாக பேசிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |