Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிறுத்தப்பட்ட பேருந்துகள்….. “மீண்டும் இயக்கனும்”…. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

பேருந்துகளை இயக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னூர், பலவரசன், கீழச்சேரி ஊராட்சியில் ஏற்கனவே செயல்பட்ட கீழச்சேரி, சிவந்தான்காடு, அறந்தாங்கி, குண்டக வயல், கணக்கன் வயல், நெட்டியேந்தல் ஆவுடையார் கோவில் வழிப்பாதையில் நகரப்பேருந்து, மினி பேருந்தை  இயக்க வேண்டும்.

மேலும் பெருங்காடு, அறந்தாங்கி, பள்ளத்தி வயல், இசைமங்களம், கிடங்கி வயல், சிறுமருதூர், மணமேல்குடி வழிபாதையிலும் இயக்கப்பட்ட அரசு பேருந்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த கலந்தர் தலைமை தாங்கினார். இதையடுத்து இந்த கோரிக்கை குறித்து விளக்கமாகப் பேசினார். மேலும் இந்த போராட்டத்தில் சுப்பிரமணியன், நெருப்பு முகேஷ், கீழச்சேரி சக்திவேல் உட்பட பலர் பங்கேற்று பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள்.

Categories

Tech |