உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரையா என்ற பகுதியில் வயலில் நிர்வாண நிலையில் 17 வயது சிறுமியின் உடலை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உங்களை தொடர்ந்து அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சிறுவியின் சடலத்தின் கழுத்தில் துப்பட்டாவால் இருக்க கட்டப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 30 முதல் 40 மீட்டர் தூரத்திற்கு சிறுமியை தர தரவென்று இழுத்துச் சென்று வயலில் தூக்கி வீசி உள்ளனர். இருந்தாலும் சிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. தடவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.அதன் அறிக்கை கிடைத்த பிறகு மேல் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.