பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலார்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 50 வயது நிரம்பிய பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், 60 வயது நிரம்பிய அனைத்து பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தொழிலாளர்கள் மற்றும் நலவாரிய கூட்டங்களில் வேலையளிப்பவர்கள் சார்பிலும் பங்கேற்று, வாரிய உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளை அரசு ஏற்று அரசானை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.