Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தில் கந்து வட்டி வசூல்….. விவசாயி புகார்….. ஈரோட்டில் பரபரப்பு….!!!!!!!

அத்தாணி அருகே உள்ள பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி  குமரவேல் என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில்  அவர்  கூறியிருப்பதாவது, நான் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் வாங்கினேன். இதற்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு வாகனத்திற்கும் 20 தவணை செலுத்தும் வகையில் 56,000 கடன் வாங்கினேன். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி மாதம் தோறும் தவணைத் தொகையை செலுத்தி வந்தேன். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் இரண்டு தவணைகள் தாமதமாக செலுத்தியிருக்கின்றேன்.

தற்போது முழு தொகையை செலுத்திய நிலையில் வாகனங்களில் பதிவு சான்றையும் வங்கி காசோலையும் பெற சென்ற போது நிதி நிறுவனத்தினர் அதை தர மறுக்கின்றார்கள். மேலும் கூடுதல் வட்டி தொகையாக ரூபாய் 40 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி மிரட்டி வருகின்றனர். அதனால் நிதி நிறுவனம் என்னும் பெயரில் கந்துவட்டி வசூலிக்கும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களிடமிருந்து வாகனங்களின் பதிவு சான்று மற்றும் வங்கி காசோலைகளை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |