Categories
தேசிய செய்திகள்

நிதிஷ் குமார் அரசு… மகிஷாசுரனின் வடிவம்… மக்களை சுட்டுக் கொன்ற கொடூரம்… சிரக் பஸ்வான்…!!!

அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்துவது மற்றும் துர்க்கா பக்தர்களை சுட்டு கொள்வதை விட பெரிய குற்றம் ஏதாவது இருக்கிறதா என்று சிரக் பஸ்வன் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிரக் பஸ்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் நல்லாட்சி செய்பவர் என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அவரின் கொள்கைகள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளது. அவர் ஒரு போதும் முங்கரில் பக்தர்களின் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதை பற்றி பேசவில்லை. ஊழல் பற்றியும் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. அவர் லாலுவுக்கு எதிராக செயல்பட்டதால் பல்துராம் என்று அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு அவர்களுடன் சேர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஆட்சி அமைத்தார். மாநிலத்தில் உள்ள அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், துர்கா பக்தர்களை சிக்கிக் கொள்வதையும் விட பெரிய குற்றம் ஏதாவது இருக்கிறதா? நித்திஷ் குமார் ஆட்சி மகிஷாசுரனின் ஒரு வடிவமாக மாறியுள்ளது. துர்கா பூஜையின் போது அதிக அளவு கூட்டம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மக்களை நீங்கள் சுடுவீர்களா?” என்று அவர் கூறியுள்ளார்.

முங்கர் நகரில் கடந்த திங்கட்கிழமை துர்கா சிலைகளை கரைப்பதற்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதே வாக்குவாதம் முற்றி வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் போலீசார் உள்ளிட்ட பலரும் காயமடைந்தனர்.

 

Categories

Tech |