ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட் பகுதியில் மனோகரன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கிருத்திகா வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருத்திகாவின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் கிருத்திகா தனக்கு திருமணம் செய்வதில் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு முன்னரே இதனை கூறியிருக்கலாம் என கிருத்திகாவிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கீர்த்திகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.