நடிகை தேவதர்ஷினி இனி சீரியல்களில் நடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
நடிகை தேவதர்ஷினி பல சீரியல்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். இவர் விடாதுகருப்பு, அண்ணாமலை, சிதம்பர ரகசியம், கோலங்கள், ரமணி வெர்சஸ் ரமணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார். அதுவும் காஞ்சனா படத்தின் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். அப்போது ரமணி வெர்சஸ் ரமணி என்ற சீரியல் இவரை மிகப்பெரிய பிரபலமாக உண்டாக்கியது.
தற்போது இந்த சீரியலில் இயக்குனர் நாகா காமெடி சீரியாலானன ரமணி வெர்சஸ் ரமணி மூன்றாவது சீசன் துவங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இரு சீசன்களில் நடித்து வந்த தேவதர்ஷினி புதிதாக துவங்க உள்ள மூன்றாவது சீஸனில் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இவர் நடித்த தி பேமிலி மேன் 2 சீரியஸில் தேவதர்ஷினி கதாபாத்திரம் இவருக்கு அதிக கவனத்தைப் பெற்று தந்தது தான் என தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து உள்ளதால் இனிமே சீரியல்கள் வேண்டாம் என ஒதுக்கி விட்டதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.