திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் கார்த்திகை தீபம் முடியும் வரையிலும் மூன்று நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.