ஆர் ஆர் ஆர் திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில் தியேட்டரின் திரையில் இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருக்கின்றார் ராஜமௌலி. இத் திரைப்படமானது நாளை மறுதினம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் தீவிரமாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படம் வெளியாக உள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள சூர்யா தியேட்டரில் ரசிகர்கள் தங்கள் இருக்கையை விட்டு திரையின் அருகில் செல்லாமல் இருக்க இரும்பு முள்வேலி தடுப்பு அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்களை சமாளிப்பது கடினமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர் புலம்பி வரும் நிலையில் தெலுங்கானாவில் இந்தப் படம் வெளியாக உள்ள திரையரங்கில் முள்வேலி தடுப்பு அமைத்திருப்பது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.