Categories
மாநில செய்திகள்

நாளை காலை 6 மணி- இரவு 10 மணி வரை…. 144 தடை உத்தரவு அமல்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நாளை காலை 6 மணி முதல் பகல் முழுவதும் இரவு 10 மணி வரை 144 தடை அமலில் இருக்கும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |