Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..! ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, வீட்டில் தனிமைகளில் மொத்தம் 493 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 65 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |