வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சப்ரீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ புத்தேரி நெடுங்குளம் பகுதியில் நாய் பண்ணை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சபரீஷ் நேற்று காலை நாய் பண்ணையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரீஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.