தமிழகத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக மேலிடம் முடிவு செய்தால் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார். பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜக வேட்பாளர் பட்டியல் என யாரோ வெளியிட்டுள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.