Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் தேச துரோகத்தில் ஈடுபட்டவன் போல் பார்க்கிறார் நகுல்”… பீல் பண்ணும் தேவயானியின் கணவர்…!!!

தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமார் பேட்டி ஒன்றில் நகுல் பற்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பலருடன் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் இயக்குனர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்தனர். இதனால் இரு குடும்பத்தினரும் இவர்களுடன் பேசுவதில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜகுமாரன் தேவயானியின் சகோதரர் நகுல் பற்றி கூறும்போது நகுல் இன்றளவும் என்னுடன் பேசவில்லை நான் செய்தது தேசத்துரோகம் போல் பார்க்கின்றார். தேவயானியின் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இல்லை. தேவயானியுடன் நகுல் சரியாகவே பேசுவதில்லை. தேவயானியின் இன்னொரு சகோதரர் எப்போதாவது ஒரு முறை போன் செய்து சகோதரியிடம் பேசுவார். எங்களுக்கு உறவுகள் என்றால் அது தமிழ்நாட்டு மக்களும் கலை உலகினரும் தான்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |