ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன் கொடுமை ஆகாது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்து இருக்கிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னுடன் இசைக்குழுவில் பணிபுரிந்த ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி கடந்த 10 வருடங்களாக பாலியல் உறவில் இருந்ததாகவும், இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அந்நபர் மீது பாலியல் வன் கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அவற்றில், எனக்கு திருமணம் ஆனது தெரிந்தே இசைக்குழுவில் இருந்த பெண் தன்னுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும், தன் மீதான பாலியல் வன் கொடுமை வழக்கை ரத்துசெய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. பின் இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இவ்வழக்கை திருமண உறுதிமொழி குற்றச்சாட்டாக சேர்க்க முடியாது என்று கூறினார். காதல் எனும் பெயரில் உறவில் இருந்ததால் பாலியல் வன் கொடுமை ஆகாது என்று கூறிய நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தார்.