Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் தான் கொலை பண்ணுனேன்…. தாய் கொடுத்த வாக்குமூலத்தால்…. அதிர்ச்சி அடைந்த மகள்…!!

கள்ளக்குறிச்சியில் குடித்துவிட்டு வந்த கணவனை, மனைவியே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த தம்பதிகள் மருதமுத்து – சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மருதமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் மருதமுத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்ரா அருகில் இருந்த சுத்தியலை எடுத்து மருதமுத்துவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை மருதமுத்துவின் மகள் தந்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தந்தையை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மருதமுத்துவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் மருதமுத்துவின் மனைவி “நான்தான் சுத்தியலால் அடித்து கொலை செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சித்ராவின் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |