2016 ஆம் வருடம் வெளியான கவலை வேண்டாம் என்னும் திரைப்படத்தின் மூலமாக நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக பட வாய்ப்புகளும் குவிந்து வந்தது. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது புதிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நான் உங்களை திசை திருப்புவேன் என குறிப்பிட்டிருக்கிறார் இவரின் கவர்ச்சி படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றார்கள்.