Categories
உலக செய்திகள்

நான்சி பெலோசியின் கணவரை சுத்தியலால் தாக்கிய மர்ம நபர்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

நான்சி பெலோசியின் கணவரை தாக்கிய சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஆன நான்சி பெலோசி கடந்த சில மாதங்களுக்கு முன் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு சீனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். நான்சி பெலோசியின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து நான்சி கணவர் பால்பெலோசி சுத்தியலால் கை, கால்கள் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்ப சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் போது நான்சி வீட்டில் இல்லை காயமடைந்த பால் பெலோசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது விரைவில் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கணவரை மருத்துவமனையில் சேர்த்தவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார் இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |