Categories
மாநில செய்திகள்

“நானே தலைமை ஏற்று போராட்டத்தை நடத்துவேன்”…. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை….!!!!!!!!

புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயற்சி செய்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் ஒன்பது இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை சரி செய்ய முடியாத சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்தி விடும். மேலும் தமிழ்நாட்டில் தற்போது 25க்கும் கூடுதலான மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

அவற்றில் இருந்து ஒரு நாளைக்கு அதிகாரப்பூர்வமாக 13,000 சரகுந்து லோடு ஆற்று மணல் அள்ளப்படுகின்றது. இதனைத் தவிர எந்த கணக்கிலும் வராமல் பெருமளவில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் இவை போதுமானவையாக இல்லை என கூறி கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் போன்ற மாவட்டங்களில் காவிரி, வெள்ளாறு,பாலாறு, கொள்ளிடம்  போன்ற ஆறுகளில் புதிதாக ஒன்பது மணல் குவாரிகளை அமைக்கவும் ஏற்கனவே மாட்டு வண்டிகளில் மட்டும் மனித சக்தியை கொண்டு மணல் அள்ள  அனுமதிக்கப்பட்ட 30 மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும்  அனுமதி கோரி தமிழ்நாடு அரசு சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நீர்வளத்துறை கடந்த ஆறு மாதங்களில் விண்ணப்பம் செய்து இருக்கின்றது. தமிழக அரசு நீர்வள துறையில் இந்த முயற்சி மிகவும் ஆபத்தானதாகவும் எடுத்துக்காட்டாக அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் வெள்ளாற்றில்  8 இடங்களில் எந்திரம் மூலமாக மணல் அள்ள  அரசு திட்டமிட்டுள்ளது.

செந்துறை வட்டத்தில் வெள்ளாறு மொத்தமே எட்டு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைதான் பாய்கின்றது. அந்த தொலைவிற்குள் அதாவது ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திற்குள் ஒரு குவாரி அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் கொள்ளிடம் ஆற்றில் ஐந்து இடங்களிலும் நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் மண்மங்கலம் போன்ற வட்டங்களில் காவிரி ஆற்றில் எட்டு இடங்களிலும் எந்திரங்களை கொண்டு மணல் அள்ள  கூடிய வகையில் குவாரிகளை அமைப்பதும் அதேபோல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறப்பது எந்திரங்களை கொண்டு மணல் அள்ள  அனுமதிப்பது போன்ற முடிவுகளை தமிழக அரசு கைவிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். அதற்கு மாறாக புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயற்சி செய்தால் அவற்றுக்கு எதிராக மக்களை திரட்டி பாமக சார்பில் மாபெரும் போராட்டத்தை நடத்த தலைமை ஏற்று நடத்துவேன்  என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |