கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி முகாமில் கல்லூரியில் படிக்கும் 101 மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் இதற்க்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன் மற்றும் சத்திய சுகம் ஆகியோர் செய்துள்ளனர். இதனையடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.