Categories
தேசிய செய்திகள்

நாட்டுக்காக இவர்கள் 2 பேரும் என்ன பண்ணாங்க?…. சித்தராமையா சரமாரி கேள்வி….!!!!!

பெங்களூரு பல்லாரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா கூறியதாவது “நாடாளுமன்ற தேர்தலுக்காக ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துவதாக பா.ஜனதா-வினர் கூறுகிறார்கள். இப்போது நாடு சாதி, மதத்தால் பிளவுப்பட்டுள்ளது. இதற்காகதான் ராகுல் பாதயாத்திரை நடத்துகிறார். அவரது இந்த பாத யாத்திரையை பா.ஜனதா-வினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பா.ஜனதா-வை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு, நாட்டுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை, நேரு குடும்பம் நாட்டுக்காக என்ன செய்தது என கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது நான் பா.ஜனதா-வினரிடம் கேட்கிறேன், இந்நாட்டுக்காக பிரதமர் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் என்ன செய்திருக்கிறார்கள்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பழிவாங்கும் அரசியல் மட்டுமே நடக்கிறது. நாட்டில் மோதல், வன்முறை காரணமாக மக்கள் ஒருவித பயத்திலேயே இருக்கின்றனர். இந்நாட்டுக்காக ராகுல் தனது குடும்பத்தையே தியாகம் செய்திருக்கிறார். நாட்டின் சுதந்திரபோராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கு என்ன என கூறமுடியுமா?. ராகுல் பாதயாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு புது சக்தி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதியாகும். இந்த பாத யாத்திரையால் பா.ஜனதா-வினருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது” என்று சித்தராமையா பேசினார்.

Categories

Tech |