நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியுள்ளதாவது, நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது, 1951- ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட உணவுப் பொருள் விலை உயர்வுக்கு கொரியா போரை, அப்போதைய பிரதமராக இருந்த நேரு சுட்டிக்காட்டியதையும் மற்றும் 1970- ஆம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, வருமான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தியதையும் நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.
இதையடுத்து பொருளாதார மீட்சி மற்றும் கொரோனா பேரிடருக்காக செலவிட்டதற்காக வளர்ந்த நாடுகள் பல வரியைஉயர்த்தியதாகவும், ஆனால் இந்தியா அப்படி எந்த வரியையும் உயர்த்தவில்லை. மேலும் எளிய மக்களின் சுமையை குறைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தனது பதிலுரையில் பேசியுள்ளார்.