பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்நாடு முழுவதும் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜ் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ஃபேம் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஃபேம் இந்தியா திட்டத்தின்கீழ் சார்ஜ் மையங்கள் அமைக்க ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் சார்ஜ் மையங்கள் அமைக்கப்படவுள்ளன