இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான முன்பதிவு கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச பயணியர் விமான போக்குவரத்துக்கான தடை உத்தரவை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும், பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணியர் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது. அனுமதி பெற்ற சர்வதேச சரக்கு விமானம் போக்குவரத்து விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.